600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
திரையுலகில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் சில விஷயங்களைப் பார்த்தால் திரையுலகத்திற்குள்ளேயே பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் எப்படிப்பட்ட விதத்தில் அமைந்துள்ளன என்பது புரிய வரும். கேரளாவில் நடிகை பாவனாவை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள். தமிழ் நடிகையான வரலட்சுமி சரத்குமார், ஒரு தொலைக்காட்சி நிறுவன அதிகாரி தன்னிடம் தவறாகப் பேசினார் என்று புகார் தெரிவித்ததுடன் 'Save Sakthi' என்ற ஒரு அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்.
டிவிட்டரில் கடந்த பத்து நாட்களாக பின்னணிப் பாடகி சுசித்ரா, தனுஷ், அனிருத் உள்ளிட்டோர் பற்றி புகைப்படங்களைப் பதிவிட்டு பல துன்புறுத்தல் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். பின்னர் அவையெல்லாம் 'ஹேக்' செய்து போடப்பட்டவை என்று சொல்லி தொடர்ந்து மாறி மாறி போட்டு வருகிறார்.
இதனிடையே, சுசித்ராவின் கணவரான கார்த்திக்குமார், சுசித்ரா உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு வீடியோ செய்தியை நேற்று பகிர்ந்துள்ளார். நேற்றிரவில் பல ஆபாச வீடியோக்கள் பதிவிடப்பட்டு விஷயம் மேலும் பரபரப்பானது.
இதனிடையே, தற்போது சுசித்ரா மீது தங்களது அனுதாபத்தைத் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் நலத்திற்காக உண்மையிலேயே அவர்கள் அப்படி தெரிவித்திருந்தால் உடனடியாக இந்தப் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தங்களது குரலை உயர்த்த வேண்டும். அவர்கள் அப்படி செய்வார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி...
சுசித்ரா மீது அனுதாபப்பட்டு தங்களது ஆதரைவைத் தெரிவித்துள்ளவர்களின் டிவிட்டர் பதிவுகள், இதோ...
லட்சுமி ராமகிருஷ்ணன் : சுசி, உங்களை நாங்கள் மதிக்கிறோம், நீங்கள் சொன்னவற்றையும் தள்ளிவைத்து விட மாட்டோம். நீங்கள் நம்பும் ஒருவரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கீதாஞ்சலி செல்வராகவன் : சுசித்ரா, கார்த்திக்குமார் ஆகியோருக்கு எங்களது அனுதாபம் உண்டு. இவையெல்லாம் மிகவும் மோசமான இந்த சமயங்களில் எனது மனம் அவர்களுடன் இருக்கும்...வலிமையாக இருங்கள்.. எனது கணவர் செல்வராகவன், சகோதரர் தனுஷ் மற்றும் நெருங்கிய நண்பர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நாங்கள் கார்த்திக்குமார் பின்னால் இருப்போம்.
சுசித்ராவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் ஆதரவாக இருப்பார்களா அல்லது இந்த விவகாரத்தில் பெரிய நடிகரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெயர்களும் இருப்பதால் கண்டு கொள்ளாமல் விடுவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.