இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல வட இந்திய சேனலான ‛டைம்ஸ் ஆப் இந்தியா'-வில் மூத்த செய்தி அதிகாரியாக பணியாற்றியவர் அருணாப் கோஸ்வாமி. இவரின் விவாத பேச்சுகள் பிரபலங்கள். பல வருடங்களாக அந்த சேனலில் பணியாற்றியவர், பின்னர் அந்த சேனலுடன் ஏற்பட்ட மனகசப்பால் அதிலிருந்து வெளியேறினார். இப்போது ‛ரிபப்ளிக்' என்ற புதிதாக சேனலை ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்த சேனல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த சேனலில், தமிழ் சேனலில் பிரபலமாக திகழ்ந்த ஹரிகரண் சேர்ந்துள்ளார். தந்தி டிவியில் நீண்ட நாட்களாக மூத்த செய்தி ஆசிரியராக இருந்தவர் ஹரி. பல அரசியல் பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். இதில் முஷாரப், ராஜபக்ஷே போன்ற வெளிநாட்டு அரசியல்வாதிகளும் அடங்குவர். இவரது அழகிய தமிழ் உச்சரிப்பும், அரசியல் விமர்சன விவாதமும் பிரபலமானது. தற்போது இவர் தந்தி டி.வி.யிலிருந்து விலகி ரிபப்ளிக் டிவிக்கு சென்றுள்ளார். முழுக்க முழுக்க ஆங்கில சேனலான இதில், இவர் மும்பையிலிருந்து பணியாற்ற உள்ளார். இத்தகவலை அருணாப்பே உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.