ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்மில்டன் இயக்கும் கடுகு படத்தில் நடிக்கிறார் தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன். இதில் அவருக்கு ஜோடியாக குற்றம் கடிதல் ராதிகா பிரதிஷ்டா நடிக்கிறார். இதில் ராஜகுமாரன் புலிவேஷ கலைஞராக நடிக்கிறார். இதற்காக அவர் புலிவேஷ கலைஞர்களிடம் 3 மாத பயிற்சி பெற்றார். இதுகுறித்து ராஜகுமாரன் கூறியதாவது:
இந்த கதையை விஜய் மில்டன் என்னிடம் கூற வரும் போது எனக்கு உண்மையாகவே வியப்பாக இருந்தது. ஆனால் கடுகு படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் தரமான கதையம்சம் என இந்த இரண்டும் மிக அழகாக ஒருங்கிணைந்து இருக்கும். புலி வேஷம் போடும் ஒரு கலைஞனாக நடித்து இருக்கிறேன்.
என்னுடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக அமைய வேண்டும் என்பதற்காக, என்னை ஏறக்குறைய மூன்று மாதங்கள் தலைச்சிறந்த புலி வேஷ கலைஞர்கள் சிலரிடம் பயிற்சி மேற்கொள்ள வைத்தார். பயிற்சி முடிந்ததும் புலியாகவே மாறிவிட்டதாக ஒரு உணர்வு. கதைப்படி பூனையாக இருக்கும் நான், ஒரு கட்டத்தில் புலியாகவே மாறுவேன். அப்படியொரு பவர்புல் திரைக்கதை என்கிறார் ராஜகுமாரன்.