தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. அப்படியான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது நிசப்தம். சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினரே கண்கலங்கி உள்ளனர். "படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க நாலு பேராவது திருந்துவாங்க" என்று சொல்லி யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
"இன்றைய சூழலில் சிறுமிகள் ஹாசினி, ரித்திகா, இளம்பெண்கள் நந்தினி, பாவனா ஆகியோர்களுக்கு ஏற்பட்ட நிலைகளை அறியும் பொழுது பெண் சமூகத்தின் மீது படர்ந்துள்ள கொடும் இருளை நீக்க வேண்டிய சூழல் ஒவ்வொரு மனிதருக்குமான மனித நேய கடமை என்றே உணர்த்துகிறது. இதை பிரதிபலிக்கும் விதமாகவே நிசப்தம் உருவாகி உள்ளது. அபிநயாவிற்கு இப்படம் மூலம், அவர் சாவித்திரி, ரேவதி போன்று ஒரு சிறந்த நடிகை என்ற மற்றொரு பரிமாணத்தை உணர்த்தும். பேபி சாதன்யா, இப்படம் மூலம் அனைத்து தரப்பு குடும்பங்களிலும், மனங்களிலும் ஓர் மகளாக வாழ்வாள்" என்கிறார் இயக்குனர் மைக்கேல் அருண்.
மிராக்கள் பிக்சர்ஸ் என்கிற புதிய பட நிறுவனம் மூலமாக ஏஞ்சலின் டாவென்ஸி தயாரிக்கிறார். அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ஜஸில் இசை அமைக்கிறார். மிராக்கள் பிக்சர்சுடன் இணைந்து பிஹைன்ட் த சீன்ஸ் என்ற நிறுவனம் இம்மாதம் வெளியிடுகிறது.