தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களான பிருத்விராஜ்-இந்திரஜித் சகோதரர்கள் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்துவந்தாலும் அவ்வப்போது நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பதினோரு படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. இப்போது 12வது முறையாக இவர்கள் இருவரும் 'தியான்' என்கிற படத்திற்காக மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.. நடிகரும் கதாசிரியருமான முரளி கோபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..
இந்தப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்குகிறார்.. இவர் இந்திரஜித்தையும் முரளிகோபியையும் வைத்து ஏற்கனவே 'காஞ்சி' என்கிற மிரட்டலான ஆக்சன் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் பிருத்விராஜ். வரலாற்று பின்னணியில் வட இந்தியாவை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிருத்விராஜ், அஸ்லான் முகமது என்கிற கேரக்டரிலும் இந்திரஜித், பட்டாபிராமன் என்கிற கேரக்டரிலும் நடித்துள்ளார்கள்..
“ஒரு மனிதனை நம்பமுடியாத அதிசயம் ஒன்று சந்திக்கும்போது அங்கே வரலாற்றுக்காவியம் பிறக்கிறது” என்கிற டேக்லைனுடன் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் கதையை கேட்ட மாத்திரத்திலேயே இப்படி ஒரு படத்தில் நடிப்பதற்காக என்னால் நீண்டநாட்கள் காத்திருக்க முடியாது என கூறிய பிருத்விராஜ் தனது மற்ற படங்கள் சிலவற்றின் தேதிகளை மாற்றிவிட்டு அவற்றை இந்தப்படத்திற்காக ஒதுக்கி கொடுத்து நடித்துள்ளார். அனேகமாக ஈத் பண்டிகை கொண்டாட்டமாக இந்தப்படம் ரிலீசாகும் என தெரிகிறது.