தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் நேரடியாகவோ அல்லது டப்பிங் செய்யப்பட்டோ ரிலீஸாகி செமத்தியாக கல்லா கட்டிவந்தன. இதனால் கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக டப்பிங் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை சில தினங்களுக்கு முன்னர் விலகியது. தடையை விளக்கி முதல் படமாக கெளதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த, ‛என்னை அறிந்தால்' படம், சத்யதேவ் ஐபிஎஸ்., என்ற பெயரில் டப்பாகி ரிலீஸாகி இருக்கிறது.
கர்நாடகாவில் அநேக இடங்களில் இப்படம் ரிலீஸாகியிருந்தாலும் பெங்களூவில் மட்டும் ரிலீஸாகவில்லை. போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் ரிலீஸாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன், இதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன் என கன்னட நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜக்கேஷ் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகிற மார்ச் 11-ம் தேதி போராட்டம் ஒன்றும் நடைபெற இருக்கிறது.