ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன் அகில் திருமணம் ஏறக்குறைய நின்று போய்விட்டதாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தெலுங்குத் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பான தகவல் உலா வந்தது. ஆனாலும், நாகார்ஜுனா, அமலா, அகில் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் யாருமே இதுவரை அதைப் பற்றி வாய் திறந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்தனைக்கும் நாகார்ஜுனாவும், அகிலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதையாவது பதிவிடும் பழக்கம் கொண்டவர்கள்தான். அவர்களாக சொல்லாதவரை அகில் திருமணம் எதனால் நின்றது என்பது பற்றி உண்மையான தகவல் வெளிவர வாய்ப்பில்லை.
இதனிடையே, நாகார்ஜுனாவின் மூத்த மகனானா நாகசைதன்யாவிற்கும், சமந்தாவிற்கும் திட்டமிட்டதற்கு முன்பாகவே திருமணத்தை நடத்தி முடிக்க நாகார்ஜுனா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா தற்போது நான்கைந்து தமிழ்ப் படங்களிலும், ஓரிரு தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்தப் படங்களை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த சில மாதங்களில் எவ்வளவு சீக்கிரம் திருமணத்தை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
அகில் திருமணம் நின்று போனது குடும்பத்திற்கு நல்லதல்ல, உடனே மற்றுமொரு சுபகாரியத்தை நடத்தி முடிக்க வேண்டுமென்று என்று ஜோசியர்கள் தெரிவித்ததால் நாகசைதன்யா, சமந்தா திருமணத்தை முன்னரே நடத்த முடிவெடுத்துவிட்டார்களாம். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா நடிக்க முடிவெடுத்துள்ள நிலையில், இனி அவர் புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே தெரிவிக்கிறார்கள். திருமணத்திற்குப் பின்பு சமந்தா குடும்ப வாழ்க்கையில்தான் அதிகம் ஈடுபடுவார் என்கிறார்கள்.
சீக்கிரமே இது பற்றிய முறையான அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.