ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛தெய்வத்திருமகள்' படத்தை இயக்குநர் விஜய், இயக்கிய போது அமலாபாலின் அறிமுகம் கிடைத்தது. அப்போதே இருவருக்கும் நல்ல நட்பு கிடைக்க, தனது தலைவா படத்திலும் வாய்ப்பு தந்தார் விஜய். நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம், பின்னர் காதலாக மாறி திருமணத்திலும் முடிந்தது. ஆனால் இந்த திருமணம் ஒருவருடத்திலேயே முறிவுக்கு வந்தது. இருவரும் சட்டப்படி சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விஜய் தன் பட இயக்கத்தில் பிஸியாக உள்ளார். நடிகை அமலாபால், மீண்டும் நடிப்பில் பிஸியாக தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள் என்றும், இந்த சேதி அமலாபாலின் காதுக்கு வந்த போது கண்கலங்கியதாகவும் செய்தி வந்தது. ஆனால், இயக்குநர் விஜய், மறுமணம் குறித்த செய்தியை மறுத்துள்ளார்.
இதுப்பற்றி இயக்குநர் விஜய் கூறியதாவது... சில தினங்களாக சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருப்பதாக ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகிறது. இது போன்ற ஆதாரமற்றச் செய்திகள் என்னை வருத்தப்பட வைக்கிறது. என் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிற தார்மீக உரிமை எனக்கு இருக்கிறது. தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என் கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்.