ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் முக்கியமான ஒருவர். தற்போது இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கு செக்ஸி துர்கா என டைட்டில் வைத்துள்ளார். கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி இருக்கிறாரம். ஆனால் இந்தப்படத்தின் டைட்டிலை இவர் வைத்ததில் இருந்தே பல பக்கங்களில் இருந்து அவ்வப்போது மிரட்டல் வர ஆரம்பித்தது.
இது ஒருபக்கம் இருக்க இந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்த ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே என்கிற நடிகைக்கு ஆபாச போன்கால்களும் அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் ஆபாச வர்ணனைகளுடன் கூடிய கமெண்ட்டுகளை சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்களாம். இன்னும் ஒருபடி மேலாக ஆபாச வீடியோக்களின் லிங்குகளையும் அவரது சோஷியல் மீடியா பக்கத்தில் இணைத்து டார்ச்சர் கொடுக்கிறார்களாம்.. “செக்ஸி துர்கா' என்றால் செக்ஸ் படம் தான் என்றும் அதில் நடித்துள்ள நடிகையும் தப்பான பெண் தான் என்றும் தப்பான கண்ணோட்டத்துடன் பலர் இப்படி டார்ச்சர் கொடுப்பதை ஜீரணிக்க முடியவில்லை” விரக்தியுடன் கூறியுள்ளார் நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே..