ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
சில நாட்களுக்கு முன் நடிகை பாவனா கடத்தப்பட்டு விடுபட்ட விவகாரமும், பாலியல் ரீதியாக சித்தரவதைக்கு ஆளான விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அதிலிருந்து ஒருவழியாக தேறிய பாவனா மீண்டும் முன்பைப்போல் நடிக்க விரும்புவதாக கூறி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். அதேசமயம் தான் நடந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக தன்னம்பிக்கை தரும் செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்..
இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்ததோடு பாவனாவின் தன்னம்பிக்கையையும் பாராட்டினர். பாவனாவின் நண்பரும் மலையாள இயக்குனர் கம் நடிகருமான வினீத் சீனிவாசனும் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை ஷேர் பண்ணியிருந்தார். ஆனால் இப்போது அந்த பதிவை தனது பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.. அத்துடன் “இது உண்மையாகவே பாவனா பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.. அதனால் இதை நீக்குகிறேன்” என விளக்கமும் கூறியுள்ளார்..
அனேகமாக இந்த பதிவை தான் இடவில்லை என்பது குறித்து பாவனாவிடம் இருந்து ஏதாவது தகவல் தெரியவந்திருக்கலாம் என்றும் அதன்பின்னரே வினீத் சீனிவாசன் அதை நீக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.. அப்படியானால் பாவனாவின் இன்ஸ்டாகிராமில் அந்த பதிவை இட்டது யார் என்கிற கேள்வியும் கிளம்பியுள்ளது.