சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவரது அப்பாவும் இயக்குநருமான மகேஷ் பட்டை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையென்றால் ஆலியா மற்றும் மகேஷின் மனைவியை கொன்று விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியாவிடம் இதுபோன்ற மிரட்டல்கள் பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது...
நான் என் அப்பாவையும், போலீஸையும் அழைத்திருப்பேன், ஆனால் அதற்கான வாய்ப்புகள் எனக்கு கொடுக்கப்படவில்லை, போலீசாரே எல்லாவற்றையும் முடித்துவிட்டனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பெற்றோர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பார்கள். அந்தவகையில் என் தந்தை எனக்கு முழு பாதுகாப்பாக இருக்கிறார். அப்படியிருக்கையில் என்னை யாரும் பயமுறுத்த முடியாது என்கிறார் ஆலியா.
ஆலியா பட், தற்போது ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.