தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வருடந்தோறும் தெலுங்கு சினிமாவில் தங்களது படங்களில் சிறந்த பங்களிப்பை தந்தவர்களுக்கு ஆந்திர அரசின் மிக உயர்ந்த விருதான நந்தி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதினை நமது தமிழ்த்திரையுலகத்தினரில் சிலரும் பெற்றுள்ளார்கள். ஆனால் இதுநாள் வரை மலையாள திரையுலகில் இருந்து யாரும் இந்த விருதை பெற்றதில்லை.. இப்போது முதன்முறையாக மலையாள குணச்சித்திர நடிகரான சித்திக், நந்தி விருதை பெற்றுள்ளார். நாசர், பிரகாஷ்ராஜ் போன்று மலையாள சினிமாவின் தவிர்க்கமுடியாத குணச்சித்திர நடிகர்தான் இந்த சித்திக்.
2013ஆம் வருடத்திற்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'நா பங்காரு தல்லி' என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது சித்திக்கிற்கு கிடைத்துள்ளது.. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவான இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல பல சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பெற்றுள்ளது இந்தப்படம். மலையாள நடிகர் ஒருவர் நந்தி விருது பெற்றுள்ளது மலையாள திரையுலகில் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.