ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர்கள் அனைவரும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தால் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப் மட்டும் ஒருபடி மேலே போய் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை கட்டினார். அதில் கூட வித்தியாசமாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பெரிய நகரங்களை ஒதுக்கிவிட்டு அளவான சிறிய நகரமான சாலக்குடியில் இந்த தியேட்டர்களை அமைத்திருக்கிறார். மூன்று திரையரங்குகளை கொண்ட இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் கடந்த 2014 கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து படங்களை திரையிட்டு வருகிறது.
தற்போது சாலக்குடி பகுதியை சேர்ந்த சிலர் சோஷியல் மீடியாவில் 'நமது சொந்தம் சாலக்குடி' என்கிற பக்கத்தை உருவாக்கி இந்த தியேட்டருக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகிறார்கள். மற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை விட இதில் கட்டணம் அதிகம் என்றும், மூன்று வயது குழந்தைகளுக்கு கூட டிக்கெட் எடுக்க வேண்டும் என ஊழியர்கள் அராஜகம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. தவிர கார் பார்க்கிங் கட்டணத்திலும், கேண்டீன் விற்பனையிலும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.. ஜனப்ரிய நாயகன் என சொல்லிக்கொண்டு ஜனங்களுக்கு பிரியமில்லாத வேலையை திலீப் செய்வது ஏன் எனவும் சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது..