திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சமீபத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. இந்த விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து கலைத்துறையில் சாதனைகள் புரிந்தவர் என்கிற வகையில் நடிகர் கமல் இந்த விழாவில் கலந்து கொண்டது போல, கேரளாவில் இருந்து ராஜ்யசபா எம்பி என்கிற முறையில் நடிகர் சுரேஷ்கோபியும் கலந்து கொண்டார்..
இங்கிலாந்து மகாராணியை அவர் சந்தித்தபோது சுரேஷ்கோபி அணிந்திருந்த உடை ராணியை மிகவும் கவர்ந்ததாம். அந்த உடை குறித்து தனது பாராட்டை தெரிவித்த ராணி, இந்திய அரசியலில் அவரது பணி குறித்தும் விசாரித்தாராம். மேலும் லண்டனில் உள்ள தமிழ் மற்றும் மலையாள கூட்டமைப்பினருடன் இந்த பிரிட்டன் அரசு ஏற்பாடு ஏற்பாடு செய்த விவாத கருத்தரங்கில் கமலும் சுரேஷ்கோபியும் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த கூட்டத்தில் கமல் உட்பட நம் நாட்டினரும், மற்றவர்களும் கோட் சூட் அணிந்திருக்க, நமது பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்தினார் சுரேஷ்கோபி.