தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இசை அமைப்பாளர் பாபநாசம் சிவன். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்களுக்கும், படத்துக்கும் இசை அமைத்தவர். தஞ்சை மாவட்ட இசை குடும்பத்தை சேர்ந்த அவரின் இயற்பெயர் ராமய்யா. மிகப்பெரிய சிவபக்தர். கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் பல ஆண்டுகள் தங்கி இறைப்பணி செய்ததால் பாபநாசம் சிவன் என்று அழைக்கப்பட்டார். வேலை தேடி சென்னை வந்த அவர், இங்கு பணக்கார குடும்பத்து பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார்.
1933ம் ஆண்டு சாந்தாராம் இயக்கிய சீதா கல்யாணம் என்ற படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெறவே பல வாய்ப்புகள் வந்தது. முழுநேர இசை அமைப்பாளர் ஆனார். தியாகராஜ பாகவதரின் அனைத்து படங்களுக்கும் இசை அமைத்தார். அவரே பாடல்களை எழுதி இசை அமைப்பார். பின்னர் அதை பாடும் நடிகர்களுக்கு கற்றுக் கொடுப்பார். 20 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்த அவர் 100 படங்கள் வரை இசை அமைத்திருக்கிறார்.
பாபநாசம் சிவன் மிகவும் ஒல்லியா இருப்பார். நெற்றில் எப்போதும் திருநீரு நிறைந்திருக்கும். அவரை பார்த்தாலே வணங்கத் தோன்றும். 1940ம் ஆண்டு கே.சுப்பிரமணியம் பக்த குசேலா என்ற படத்தை இயக்கினார். அதில் குசேலனாக நடிக்க ஒருவரை தேடியபோது அந்த வேடத்துக்கு சரியான பொருத்தம் பாபநாசம் சிவன் தான் என்று கருதி அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அந்த படம் வெற்றி பெறவே தியாகபூமி, அம்பிகாபதி, அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் படங்களில் நடித்தார். படித்தில் நடிப்பது இசை அமைப்பதற்கு இடையூறாக இருப்பதாக கருதிய பாபநாசம் சிவன் அதன் பிறகு நடிக்கவில்லை.