'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் சுசித்ரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு திரையுலகில் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற சுசித்ராவை தனுஷ் தாக்கினார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. கூடவே, “சிம்பு தான் வெற்றியாளர்”, “நான் பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் விளையாடிய ஒரு அசிங்கமான விளையாட்டைப் பற்றி நான் அனைவருக்கும் சொல்லத் தயாராக இருக்கிறேன். சிம்பு நீங்கள் சொன்னது சரிதான், “தனுஷ் குழுவினரால் கடினமாகக் கையாளப்பட்ட என்னுடைய கை இது. “நான் இந்தப் புகைப்படத்தை போட விரும்பவில்லை. நியாயமாக நடந்து கொள்ளவே விரும்புகிறேன்'' என்று அடுத்தடுத்து டுவிட்டூகளை போட்டு தாக்கினார்.
இது திரையுலகினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு அடுத்த இரு தினங்களிலேயே ‛‛தனது மனைவி சுசித்ராவின் டுவிட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள், இது சுசித்ரா போட்ட பதிவு அல்ல என்று அவரது கணவரும், நடிகருமான கார்த்திக்'' கூறியிருந்தார்.
இந்நிலையில், சுசித்ரா இப்போது தனுஷ், ஹன்சிகா, அனிருத், ஆண்ட்ரியா மற்றும் டிடி திவ்யதர்ஷினி ஆகியோரின் கிளுகிளுப்பான போட்டோவை பதிவுட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். கூடவே ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரு இது தனஷின் மன்மதலீலை, பாவம் ஹீரோயின்கள் என்று ஒரு டுவிட்டும், மற்ற டுவீட்டுகளில் இது ஹன்சிகாவின் லீலை, சின்னத்திரை டிடியின் லீலை, அனிருத் லீலை என்று போஸ்ட் செய்துள்ளார்.
மேலும் சுசித்ரா, ‛‛நண்பர்களே! பொறுமையாக இருங்கள், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பல வருகிறது. பல ஹீரோ, ஹீரோயின்களின் உண்மை முகம் வெளியிடப்படும்... அதிர்ச்சியடைய காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.
அதேசமயம், இதுவும் நான் பதிவிட்டது கிடையாது, எனது டுவிட்டர் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார் சுசித்ரா. மேலும், அவரது டுவிட்டர் அக்கவுண்ட்டை யாரும் பார்க்க முடியாது. அவரை பாலோ செய்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும் பாதுகாப்பு செய்திருக்கிறார் சுசித்ரா.