சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
தாரை தப்பட்டை படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் நாச்சியார் படத்தின் பூஜை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பூஜையில் பாலா, இளையராஜா, சிவகுமார், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரும், தற்போது நடிகராகவும் உள்ள ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது படத்தின் சிறப்புகளில் ஒன்று.
ஆனால், நாச்சியார் படப்பூஜையில் இளையராஜாவுடன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து காணப்படவேயில்லை. படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்ட இந்தப் படப் பூஜையின் புகைப்படங்கள் மட்டும் மீடியாக்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் இளையராஜாவும், ஜி.வி.பிரகாஷும் இணைந்து நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஃபோட்டோஷாப் செய்து அனுப்பியுள்ளனர்.
இளையராஜா கலந்து கொள்ளும் விழா என்றாலே சம்பந்தப்பட்ட கலைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால், இசையமைப்பாளர், நடிகராக இருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இளையராஜா இசையில் நடிப்பதும், பாலா இயக்கத்தில் நடிப்பதும் பெரும் பாக்கியம். அப்படியிருக்கும் போது அவர் இளையராஜா இருக்கும் போது நாச்சியார் பூஜையில் வந்து கலந்து கொள்ளாமல் போனது திரை இசைக் கலைஞர்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அது பற்றி விசாரித்த போது, ஜி.வி.பிரகாஷ், ஐங்கரன் படப்பிடிப்பிலிருந்ததால் நாச்சியார் பூஜையில் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ள முடியவில்லை என்றார்கள். ஒரு படப்பிடிப்பிலிருந்து இடையில் வந்து பல நிகழ்வுகளில் நடிகர்கள் கலந்து கொள்வது சாதாரண விஷயம்தான். ஆனால், இந்த விழாவில் இளையராஜாவுடன், ஜி.வி.பிரகாஷ் கலந்து கொள்ளாததன் பின்னணி வேறாக இருக்கும் என்றே கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அப்படியே ஜி.வி.பிரகாஷ் தாமதமாக வந்திருந்தாலும் இளையராஜாவை தனியாக சந்தித்து வாழ்த்து பெற்று அந்தப் புகைப்படத்தை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கலாமே என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இளையராஜாவை நேருக்கு நேர் சந்திப்பதை ஜி.வி.பிரகாஷ் தவிர்த்தாரா, அல்லது படக்குழுவினரே இருவரையும் நேருக்கு நேர் சந்திக்க வைப்பதை திட்டமிட்டு தவிர்த்தார்களா என்ற சந்தேகம் எழுவது இயல்புதான். படத்தின் பூஜைக்கே இப்படி என்றால் போகப் போக என்னவெல்லாம் நடக்குமோ...?.