பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
என்னுடைய சொத்துக்களில் என் மகனுக்கும், மகளுக்கும் சரி பங்கு கொடுப்பேன் என்று அமிதாப்பச்சன் அறிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும் ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். முற்போக்கு சிந்தனை கொண்ட அமிதாப்பச்சன். ஆண், பெண் சமத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதை வெறும் போதனையாக சொல்லிக் கொண்டிருக்காமல் தன் வாழ்க்கை மூலம் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் சொத்துக்களில் மகன், மகளுக்கு சரிபாதி என்று அறிவித்து ஆண், பெண் பாலியல் சமத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
சமீபத்தில் மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஒரு அட்டையை பிடித்திருந்தார். அந்த அட்டையில் "நான் இறந்தால் என் சொத்துக்கள் அனைத்தும் மகன் மகளுக்கு சமமாக பங்கிட வேண்டும். பாலியல் சமத்தும். நாம் சரிசமம்" என்று எழுதப்பட்டிருந்தது. ஜெயா பச்சன் அட்டை தாங்கி நின்ற அட்டையை பிடித்தபடி தானும் நின்று அதை போட்டோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த கருத்தை தானும் வழிமொழிவதாக குறிப்பிட்டிருக்கிறார்.