ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரிஷாவை பல வருடங்களாக சாப்ட்டான நடிகையாகத்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்த அவர், கொலை செய்யும் அளவுக்கு அதிரடியான வில்லியாக நடித்திருந்தார். அதனால் அதன்பிறகு திரிஷா மீதான இயக்குனர்கள் பார்வையே மாறியது. அந்த வகையில், சதுரங்கவேட்டை-2 படத்தில் கொடியை விட அதிரடியான வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திரிஷா. இந்த படத்தில் அரவிந்த்சாமி ஹீரோ என்றால், திரிஷாதான் வில்லியாம். அந்த வகையில், க்ளைமாக்ஸ் வரை அரவிந்த்சாமியை தண்ணிகாட்டும் வேடத்தில் நடிக்கிறார் திரிஷா.
மேலும், இந்த படத்தில் பூர்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அந்த படத்தில் கதையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாம். குறிப்பாக, அரவிந்த்சாமி தற்போது வில்லன் வேடங்களை தவிர்த்து ஹீரோவாகி விட்டதால் தனக்கு ஜோடி நடிகை வேண்டும் என்கிறாராம். அதனால் அவ ருக்கு ஒரு ஜோடி நடிகையை புக் பண்ணுகிறார்களாம். இதன்காரணமாக பூர்ணா நடித்து வந்த கேரக்டர் டம்மியாகி விட்டதாம். அதைப்பார்த்து கடுப்பான பூர்ணா, தாமாகவே அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டாராம்.