பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நடிகர் சங்க தேர்தலை போன்று தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் பரபரப்பாகி உள்ளது. இந்தாண்டு ஐந்து அணியாக பிரிந்து போட்டியை சந்திக்கிறார்கள். நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற விஷால் அணி களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் எழுச்சி கூட்டணி என்ற அணியில் கேயார் தலைமையில், எஸ்ஏ.சந்திரசேகர், கதிரேசன், ஏஎல்.அழகப்பன், ஏஎம்.ரத்னம், பிடி.செல்வகுமார் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.
இந்த அணியின் அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பேசிய எழுச்சி அணியினர்... தயாரிப்பாளர்கள் சங்கத்தை கைப்பற்ற நடிகர் சங்கம் முன்வரகூடாது. குழந்தையின் வலி ஒரு தந்தைக்கு தான் தெரியும். தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்வுக்கு தயாரிப்பாளர்கள் தான் நிற்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிற்பவர்களுக்கு அனுபவம் பொறுமை அவசியம். எங்கள் எழுச்சி அணி பைரசியை சுத்தமாக ஒழிக்கும். நடிகர்கள் பொறுப்புக்கு வந்தால் யார் பக்கம் நியாயம் சொல்வார்கள்?. கியூப் சென்சார் போன்ற பல முக்கிய பிரச்சனைகளை எங்கள் அணி தீர்க்கும். சூட்டிங் வராதவர்கள் மீட்டிங் வருவார்களா.? என்றனர்.
கேயாரிடம் மன்னிப்பு கேட்ட எஸ்ஏசி., : நாங்கள் ஒருவருக்கு ஒருவர் விரோதிகள் அல்ல. வழக்கு போட்டோம், ஆனால் திரையுலகம் நல்லா இருக்க ஆசைப்பட்டோம். கேயார் இடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் தலைவராக இருந்த போது பல இடையூறுகள் இருந்திருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த அணியினர் சங்கத்தின் இழந்த பெருமையினை திரும்ப பெறுவோம். இழந்த சக்தியினை திரும்ப பெறுவோம் என்றார்.
தேர்தல் வாக்குறுதி : தயாரிப்பாளர்களின் வருமானம் உயர்த்த வழி வகை செய்யப்படும், சிறு படங்களின் விளம்பரத்திற்கு வழிவகை, புதிய தொலைக்காட்சி தொடக்கம், சென்னை மாநகர இலவச மாதாந்திர பஸ் பாஸ், 60 வயது கடந்தவர்களுக்கு ஒய்வூதியம் 5000 முதல் 6000 வரை, விருப்பதொகை 1500 முதல் 2000 வரை, திருட்டு வீடியோ வலைதளம் பிரச்சினைகளுக்கு தீர்வு, மாத சம்பளத்தில் வழக்கறிஞர் போலிஸ் அதிகாரிகள் நியமனம், குடியிருப்பு நிலம்... உள்ளிட்டவைகள் பதவி ஏற்ற 6 மாதத்தில் உறுதியாக பெற்று தருவோம் என்று எழுச்சி அணியினர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர்.