‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜெயம் ரவி, பாலிவுட் நடிகை சாயிஷா நடிக்கும் படம் வனமகன். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ், தம்பி ராமய்யா, வருண், வேல.ராமமூர்த்தி நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். திங் பிக் ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்கிறார்.
இந்தப் படம் ஒரு பழங்குடி இளைஞனின் கதை. அந்தமானில் ஜார்வா என்ற தீவில் வசிக்கும் இளைஞன் ஜெயம்ரவி. வெளி உலக தொடர்பு எதுவும் கிடையாது. செல்போன், உள்ளிட்ட எந்த கண்டுபிடிப்பும் அவர்களுக்கு தெரியாது. கிடைப்பதை கொண்டு சந்தோஷமாக வாழ்க்கிறார்கள். அந்த தீவுக்கு சுற்றுலாச் செல்கிறார் சென்னை பொண்ணு சாயிஷா. காட்டுக்குள் ஒரு ஆபத்தில் அவர் சிக்கிக் கொள்ள அதிலிருந்து அவரை காப்பாற்றுகிறார் ஜெயம்ரவி. பின்னர் இருவருக்கும் அங்கு காதல் பிறக்கிறது.
ரவியை இந்த உலகத்தை உனக்கு காட்டுகிறேன் வா என்ற சென்னைக்கு அழைத்து வருகிறார். இந்த உலகம், வாழ்க்கை எல்லாமே அவருக்கு புதிதாக இருக்கிறது. கள்ளம் கடமில்லாத அந்த காட்டு மனிதன், நாட்டு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாரா, தன் மலை கிராமத்துக்கே திரும்பிச் சென்றாரா. ரவி, சாயிஷா காதல் என்ன ஆனது என்பதை ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் கலந்து புதிய கதை களத்தில் சொல்கிறார் ஏ.எல்.விஜய்.
அலெக்சாண்டர் டெரிம்ஸ் என்பவர் இயக்கிய சேவ் தி ஜார்வாஸ் என்கிற ஆவணப் படத்தின் இன்ஸ்பிரேஷனில் 6 வருடங்களுக்கு முன்பே இந்த கதையை உருவாக்கி விட்டார் விஜய். முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அவர் பிசியாக இருந்ததால் தள்ளிப்போய் இப்போது ஜெயம்ரவி நடிக்க படம் வேகமாக உருவாகி வருகிறது.