தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரே நிகழ்ச்சியை ஒரே தொகுப்பாளர் 10 ஆண்டுகள் தொகுத்து வழங்குவது சின்னத்திரையில் ஒரு சரித்திர சாதனை தான். பெப்சி உமாவுக்கு பிறகு அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் ஸ்ரீதேவி. 18 வயதில் நிகழ்ச்சிக்குள் வந்தவர் இன்று 28 வயதை தொட்டிருக்கிறார்.
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிதான் அது. காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீதேவி தொகுத்து கொடுக்கும் பழைய பாடல்களை கேட்காமல் யாரும் அன்றைய நாளை துவங்குவதுமில்லை. முடிப்பதும் இல்லை. பழைய பாடல்களின் பின்னணி, பாடல் பிறந்த விதம். அதன் சிறப்பு என ஸ்ரீதேவியின் விளக்கத்திற்கு பிறகு அந்த பாடலை கேட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அவரது சிறப்பு பாடல்கள் ஒளிபரப்பாகும். அது முன்னமே பதிவு செய்யப்பட்டு அவரது பார்வைக்கு போகும். இதனை ஸ்ரீதேவிதான் ஒவ்வொரு ஆண்டும் தொகுத்து வழங்கினார். ஒரு ஆண்டு சில காரணங்களால் ஸ்ரீதேவியால் தொகுக்க முடியாமல் போக வேறு ஒரு தொகுப்பாளினியை கொண்டு தொகுத்து ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பினார்கள். அதை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா ஸ்ரீதேவியை கொண்டு நிகழ்ச்சி தயாரித்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு சேனலில் ஸ்ரீதேவியின் ரேன்ஞ்சே தனி.