பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரே நிகழ்ச்சியை ஒரே தொகுப்பாளர் 10 ஆண்டுகள் தொகுத்து வழங்குவது சின்னத்திரையில் ஒரு சரித்திர சாதனை தான். பெப்சி உமாவுக்கு பிறகு அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் ஸ்ரீதேவி. 18 வயதில் நிகழ்ச்சிக்குள் வந்தவர் இன்று 28 வயதை தொட்டிருக்கிறார்.
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிதான் அது. காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீதேவி தொகுத்து கொடுக்கும் பழைய பாடல்களை கேட்காமல் யாரும் அன்றைய நாளை துவங்குவதுமில்லை. முடிப்பதும் இல்லை. பழைய பாடல்களின் பின்னணி, பாடல் பிறந்த விதம். அதன் சிறப்பு என ஸ்ரீதேவியின் விளக்கத்திற்கு பிறகு அந்த பாடலை கேட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அவரது சிறப்பு பாடல்கள் ஒளிபரப்பாகும். அது முன்னமே பதிவு செய்யப்பட்டு அவரது பார்வைக்கு போகும். இதனை ஸ்ரீதேவிதான் ஒவ்வொரு ஆண்டும் தொகுத்து வழங்கினார். ஒரு ஆண்டு சில காரணங்களால் ஸ்ரீதேவியால் தொகுக்க முடியாமல் போக வேறு ஒரு தொகுப்பாளினியை கொண்டு தொகுத்து ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பினார்கள். அதை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா ஸ்ரீதேவியை கொண்டு நிகழ்ச்சி தயாரித்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு சேனலில் ஸ்ரீதேவியின் ரேன்ஞ்சே தனி.