பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ஒரே நிகழ்ச்சியை ஒரே தொகுப்பாளர் 10 ஆண்டுகள் தொகுத்து வழங்குவது சின்னத்திரையில் ஒரு சரித்திர சாதனை தான். பெப்சி உமாவுக்கு பிறகு அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் ஸ்ரீதேவி. 18 வயதில் நிகழ்ச்சிக்குள் வந்தவர் இன்று 28 வயதை தொட்டிருக்கிறார்.
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிதான் அது. காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீதேவி தொகுத்து கொடுக்கும் பழைய பாடல்களை கேட்காமல் யாரும் அன்றைய நாளை துவங்குவதுமில்லை. முடிப்பதும் இல்லை. பழைய பாடல்களின் பின்னணி, பாடல் பிறந்த விதம். அதன் சிறப்பு என ஸ்ரீதேவியின் விளக்கத்திற்கு பிறகு அந்த பாடலை கேட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அவரது சிறப்பு பாடல்கள் ஒளிபரப்பாகும். அது முன்னமே பதிவு செய்யப்பட்டு அவரது பார்வைக்கு போகும். இதனை ஸ்ரீதேவிதான் ஒவ்வொரு ஆண்டும் தொகுத்து வழங்கினார். ஒரு ஆண்டு சில காரணங்களால் ஸ்ரீதேவியால் தொகுக்க முடியாமல் போக வேறு ஒரு தொகுப்பாளினியை கொண்டு தொகுத்து ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பினார்கள். அதை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா ஸ்ரீதேவியை கொண்டு நிகழ்ச்சி தயாரித்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு சேனலில் ஸ்ரீதேவியின் ரேன்ஞ்சே தனி.