'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு பாலா நாச்சியார் படத்தை இயக்கி, தயாரிக்கிறார். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை, புதுமுகங்களை வைத்து காதல் படம், ஆர்யா, விஷால், ராணா நடிப்பில் மும்மொழி பிரமாண்ட படம் என பல செய்திகளை கடந்து, தற்போது நாச்சியார் படம் பூஜையில் வந்து நிற்கிறது. இதனை ஈகான் நிறுவனத்துடன் இணைந்து பாலாவின் பி ஸ்டூடியோ தயாரிக்கிறது. ஜோதிகா, ஜி.பி.பிரகாஷ்குமார், நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. இளையராஜாவும் சிவகுமாரும் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். இளையராஜா, பாலா நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினார், சிவகுமார், ஜோதிகா நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினார். ஜோதிகா சினிமாவில் மீண்டும் நடிப்பது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் பல வெளியான நிலையில் சிவகுமாரை, மருமகளை திலகமிட்டு வாழ்த்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.எல்.விஜய், சூர்யா, தயாரிப்பாளர் டி.சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.