மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
நடிகர் கருணாஸ், திருவாடணை தொகுதி எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் அவரது தொகுதியில் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருணாஸ் திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் உள்ள அவரது போய்ஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணிநேரம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‛ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அவரது பாட்ஷா படம் டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது. அதற்காக வாழ்த்து சொல்ல சென்றேன். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சில புத்திமதிகளை ரஜினி வழங்கினார்.
ஜெயலலிதாவின் ஆட்சி காக்கப்பட வேண்டும். அவரது மரணத்தில் சந்தேகம் இருந்தால் நீதி விசாரணை மேற்கொள்ளட்டும். முதல்வராக பன்னீர் செல்வம் இருந்தபோது இதை ஏன் அவர் செய்யவில்லை என்றார்.