விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சாட்டை யுவன் கமரக்கட்டு, இளமி படங்களுக்குப்பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கயிருந்தார். குற்றப்பரம்பரை காலகட்டத்து கதையை இயக்கயிருந்தபோது ஏற்பட்ட சில பிரச்சினைகளால், அந்த கதையை ஓரங்கட்டி விட்டு ஒரு காதல் கதையை எடுக்க முடிவெடுத்தார் பாலா. அதில் நடிக்க சாட்டை யுவன்-சூப்பர் சிங்கர் பாடகி பிரகதியை ஒப்பந்தம் செய்திருந்தார். அதனால் அவர்களும் பாலா படத்தில் நடிக்க தங்களை எப்போது வேண்டுமானாலும் அழைப்பார் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டு ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படத்தை தொடங்கிவிட்டார் பாலா.
இதுகுறித்து சாட்டை யுவனை தொடர்பு கொண்டு கேட்டபோது, பாலா சார் தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்தபோது நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அவரது அலுவலகத்துக்கு ஓடோடிச் சென்றேன். அப்போது எனது புதிய படத்தில் நீதான் நடிக்கிறாய் என்று சொன்னவர், வேறு படத்தில் கமிட்டாக வேண்டாம் என்றார். அதனால் புதிய படங்களுக்கான கதை கேட்பதையே நிறுத்தி விட்டு பாலா சாரின் அழைப்புக்காக பல மாதங்களாக காத்திருந்தேன்.
ஆனால், தற்போது நாச்சியார் படத்தை தொடங்கி விட்ட அவர், நானும், பிரகதியும் நடிக்கயிருந்த படத்தை இந்த படத்தை முடித்ததும் இயக்கப்போவதாக கூறிவிட்டார். இது எனக்கு பெரிய அதிர்ச்சிதான். என்றாலும், பாலா சார் படத்தில் எப்படியும் நடிப்பேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். மேலும், தற்போது நான் நடித்துள்ள விளையாட்டு ஆரம்பம் என்ற படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டி ருக்கிறது. இதையடுத்து இன்னொரு படத்தில் நடிக்க கதை கேட்டிருக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி விடும் என்கிறார் சாட்டை யுவன்.