பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான அனாமிகா தான் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த முதல் படம். அந்த படம் தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் வெளியானது. அதையடுத்து அவர் நடித்த மாயா என்ற ஹாரர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைப்பார்த்து தான் பின்னர் டோரா என்ற இன்னொரு ஹாரர் படத்தில் கமிட்டானார் நயன்தாரா. அந்த படம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது இமைக்கா நொடிகள், அறம், வேலைக்காரன், கொலையுதிர்காலம் என பல படங்களில் பிசியாகி விட்டார் நயன்தாரா. இந்த நேரத்தில், மேலும் சில டைரக்டர்கள் ஹாரர் கதைகளுடன் நயன்தாராவை முற்றுகையிட்டு வருகின்றனர். அந்த டைரக்டர்களிடம் டோரா படம் ரிலீசாகட்டும். அதற்கு எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துதான் அடுத்த ஹாரர் படத்தில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று கூறி விடடாராம். அதனால் நயன்தாராவை விட அடுத்தபடியாக நயன்தாராவிடம் ஹாரர் கதை சொல்லி ஓகே பண்ண வேண்டும் என்று காத்திருக்கும் இயக்குனர்கள் டோரா எப்படியேனும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.