அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வம்சம் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பிரியங்கா. இந்த தொடரில் நடித்து பிரபலமான பிறகு பல சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். ஆனால், வம்சம் சீரியலில் மாதத்திற்கு 17 நாட்கள் வரை நடிக்க வேண்டியிருப்பதால் அவரால் புதிய தொடர்களில் நடிக்க முடியவில்லையாம். மேலும், சீரியலில் நடிப்பது போக மீதமுள்ள நேரத்தை சமூக சேவைகள் செய்து வருவதாக சொல்கிறார் பிரியங்கா.
அதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சமூக சேவைகளில் ஆர்வம் மிகுதி. அதன்காரணமாக, எனது மீடியா நண்பர்களுடன் இணைந்து ஒரு டீம் தொடங்கியிருக்கிறோம். தற்போது இதில் 8 பேர் உள்ளனர். மேலும், இந்த டீம் பெரிதாக இருந்தால்தான் பெரிய அளவில் உதவிகள் செய்ய முடியும் என்பதால் சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்களை எங்கள் குழுவில் இணைத்து வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் பணம் சேகரித்து அதை வைத்து விவசாயிகள், ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்யப்போகிறோம்.
அதன் முதல்கட்டமாக, கிராமங்களுக்கு சென்று மரங்கள் நடப்போகிறோம். அப்படி நடப்படும் மரங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கு முறையான நபரிடம் ஒப்படைக்கப்போகிறோம். இன்றைக்கு வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து விட்டது. அதனால் அதை தடுக்கும் முயற்சியாக, அதிகப்படியான வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் ஏழை விவசாயிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யப்போகிறோம் என்கிறார் வம்சம் பிரியங்கா.