‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோருக்கு, துாக்கு தண்டனை தர வேண்டும், என, நடிகை வரலட்சுமி ஆவேசமாக கூறினார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆதரவு இருந்தது : தனியார், டிவி நிகழ்ச்சி தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரால் பாதிக்கப்பட்டதாக, நான், டுவிட்டரில் பதிவிடும் முன், நிறைய ஆலோசித்தே இறங்கினேன். நிறைய எதிர்ப்பு வரும் என, நினைத்தேன்; ஆதரவு குரல் தான் இருந்தது. இதை இப்படியே விட்டு விடாமல், அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்தேன்.
பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் : இந்தியாவிலேயே, தமிழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம். ஆனாலும், இன்றைய காலக்கட்டத்தில், இன்னும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது. பெண்களுக்கு, திரைத்துறையில் மட்டுமின்றி, பிற துறைகளிலும், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
அரசுக்கு இரண்டு கோரிக்கை : இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன். முதலாவதாக, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும், மகளிர் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். இரண்டாவது வழக்குகளை, ஆறு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பு தர வேண்டும்.
கையெழுத்து இயக்கம் : பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 5 சதவீதம் மட்டுமே தீர்ப்பாகிறது. இதனால், பெண்களுக்கு எதிராக குற்றம் புரிவோர் அஞ்சுவதில்லை; இதை மாற்ற வேண்டும். இதற்காக, பெண்கள் தினமான மார்ச், 8ல், சென்னை எழும்பூர் மைதானத்தில், சேவ் சக்தி என்ற பெயரில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்துகிறேன்.காலை, 9:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, அனைவரும் கையெழுத்து போடலாம். இதை, மாநில அரசிடம் சமர்ப்பிப்பேன்.
நடிகர் சங்கத்திற்கு போகமாட்டேன் : நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறையினர் யாரிடமும், எந்த கோரிக்கையும் வைக்கப் போவது இல்லை. என் நடவடிக்கையால், இரண்டு பேருக்கு நல்லது நடந்தால் கூட போதும். எதிர்காலத்தில், திரைத்துறையில் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க, தனி அமைப்பு துவங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். அதில், ஓய்வு பெற்ற நீதிபதிகளே இருப்பர்.
தூக்கு தண்டனை தர வேண்டும் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்க வேண்டும். குறைந்தபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை தர வேண்டும்.பெண்களுக்கான பாதுகாப்பு விஷயங்களை, ஒவ்வொருவரும், அவரவர் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும். எதிர்காலத்தில், சினிமாவிலும், பெண்களுக்கு எதிரான ஆபாச மற்றும் வன்முறை குறையும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.