ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இதோ வருகிறேன் நெடுவாசல் என்ற பெயரில் கமல் எழுதியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது, ஆனால் இது தனது கூற்று அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தில் நிலவும் அசாத்திய சூழ்நிலைகளுக்கு கமல் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அரசியல் மாற்றம்... என ஒவ்வொரு பிரச்னையிலும் தனது கருத்தை தைரியமாக பதிவு செய்தார். அதேசமயம் அவரது பெயரில் சில பொய்யான செய்திகளும் சமூக வலைதளங்களில் உலா வந்தன. கமலும் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் தொடர்பான பிரச்னை, நெடுவாசிலில் நடந்து வருகிறது.
இதுகுறித்து கமல் கூறியது என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதில், ‛‛இதோ வருகிறேன் நெடுவாசல்... போலீஸ் அடிச்சா திருப்பி அடி, அடிச்சா திருப்பி அடி, அப்போ தான் அரசியல்வாதி அடங்குவான் என்று நீண்ட நெடிய செய்தி இடம் பெற்றுள்ளது. ஆனால் இதை தான் வெளியிடவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ‛‛லைவ் டே தமிழ்நாடு தளத்தில் என் பெயரால் எழுப்பப்படும் வன்முறை அறிவுரைகளும், வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல. போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது. லைவ் டே தமிழ்நாடு இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது இயக்கத்தாருக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார் கமல். அதாவது, யாரையும் மரியாதை குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மை பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கும், அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை என்று கூறியுள்ளார்.