ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரே ஒரு 'வாட்ஸ் அப்' வீடியோ பெரும் புயலைக் கிளப்பிவிட்டுவிட்டது. பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் 7 ஹீரோக்களின் படங்களின் வசூல் நிலைமை இதுதான் என்று சொன்ன விஷயங்கள் சலசலப்பை அதிகப்படுத்திவிட்டன.
வியாபாரம், வசூல் என்றாலே எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் பலரும் அவரைத் தொடர்ந்து பேட்டிகள் எடுத்து பல விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பேட்டியிலும் சில புதுப்புது விஷயங்களை அவரும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார். ஒரு பேட்டியில், இனி வினியோகஸ்தர்களே படங்களின் உண்மையான வசூலைப் பற்றி அறிவிக்கப் போகிறோம் என்ற அதிர்ச்சியைக் கொடுத்தார். மற்றொரு பேட்டியில் விஜய் படத்தில் பணியாற்றியவர்களுக்கு செயின் பரிசளித்ததைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
“பைரவா' படத்தை வாங்கி வெளியிட்டதில் எனக்கு ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், அந்தப் படம் வெற்றி பெற்றது என படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் செயின் பரிசளித்தார். ஆனால், படத்தை வாங்கி நஷ்டப்பட்ட நானே அதைச் சமாளிக்க செயின்களை விற்றாக வேண்டிய சூழ்நிலை. ஹீரோக்கள் இப்படி செய்வதுதான் வினியோகஸ்தர்களாகிய எங்களுக்குப் பிடிக்கவில்லை,” என அவர் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு ஹீரோவும் அவர்கள் படம் என்ன வசூல் பெற்றது என்பதை அந்தப் படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களிடம் தெரிந்து கொண்ட பிறகே வெற்றி விழாவைக் கொண்டாடுவதையோ, பரிசளிப்பதையோ செய்ய வேண்டும் என்று வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால், அதை யாராவது தொடர்வார்களா என்பது கேள்விதான்...