'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சக்தி என்ற அமைப்பை தொடங்கிகுகிறார் நடிகை வரலெட்சுமி சரத்குமார். இந்த அமைப்பிற்கு ‛சேவ் சக்தி' என்று பெயர் வைத்திருக்கிறார்.
நடிகர் சரத்குமார் மகள், வரலெட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன், தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநர் என்னை தவறான கண்ணோட்டத்துடன் என்னை அணுகினார் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்தும் கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. நடிகர் சங்கம், விஷால் உட்பட பலரும் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சரத்குமார் மகள் வரலட்சுமி தைரியமாக ஒரு விசயத்தை கையில் எடுத்துள்ளார். பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்குகிறார்.
இதுதொடர்பாக வரலட்சுமி கூறியிருப்பதாவது... ‛‛பாவனா விசயத்தில் எல்லாரும் கருத்தும், கண்டனமும் தெரிவிக்கின்றனர். ஆனால் சிறு வயது குழந்தைகள் யாசினி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி பெட்ரோல் ஊற்றி எரிக்கபட்டுள்ளார். இன்னொரு குழந்தை குப்பை தொட்டியில் கிடத்தப்பட்டுள்ளார். இவர்களுக்கு யார் குரல் கொடுப்பது. எனவே இவர்களை பாதுகாக்க சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கி உள்ளேன். சினிமாவில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லா பெண்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த அமைப்பை தொடங்கியுள்ளேன். வருகிற மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் முறைப்படி சங்கமாக செயல்பட இருக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியான குற்றங்களை புகார் செய்ய மகிளா கோர்ட்டை அதிகப்படுத்த வேண்டும்'' என்கிறார்.