ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜல்லிக்கட்டா அப்படின்னா என்ன? என்று கேட்டவர்தான் நம்ம ஆர்யா. ஆனால் அப்படிப்பட்டவரே ஜல்லிக்கட்டு கதையில் அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் நடிக்கிறார். 1980-களில் நடக்கும் இந்த படத்தில் ஆர்யா ஒரு ஹீரோ என்றால், இன்னொரு ஹீரோவாக அவர் தம்பி சத்யா நடிக்கிறார். அண்ணன் தம்பி ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக நடிக்கிறார்களா? இல்லை அண்ணன் தம்பிகளாகவே படத்திலும் நடிக்கிறார்களா? என்பது சஸ்பென்ஸ். ஆனால், இந்த படத்தில் தம்பியை சினிமாவில் ஆளாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடிக்கிறாராம் ஆர்யா.
மேலும், பெங்களூரில் படித்துக்கொண்டிருந்த தனது தம்பி சத்யா நடிக்க வேண்டும் என்று சொன்னதும் புத்தகம் என்ற படத்தில் நடிக்க வைத்தார் ஆர்யா. அதன்பிறகு ஜீவா சங்கர் இயக்கத்தில் சத்யா நடித்த அமரகாவியம் என்ற படத்தை தானே தயாரித்தார் ஆர்யா. ஆனால் அந்த படம் பலமாக அவரது கையை கடித்து விட்டது. அதன்பிறகு சத்யா நடித்த எட்டுத்திக்கும் மதயானை படமும் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து அவர் நடித்து வந்த காதல் டூ கல்யாணம் படம் இன்னும் திரைக்கு வராமல் உள்ளது.
இந்த நிலையில்தான், தற்போது அமீர் இயக்கும் சந்தனத்தேவன் படத்தில் சத்யா மீண்டும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தில் எப்படியேனும் தம்பியின் மார்க்கெட்டை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறாராம் ஆர்யா.