ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அமுதவாணன். அதோடு, கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், அச்சம் தவிர் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று டைட்டில் வின்னராக தேர்வானார். 2016ம் ஆண்டிற்கான விஜய் டிவியின் பெஸ்ட் காமெடியன் விருது பெற்றவர்.
பாலாவின் தாரைத்தப்பட்டை மூலம் சினிமாவில் காமெடியனாக நடித்த அவர், தற்போது ஜூலியும் 4 பேரும் என்ற படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறார்.இதுபற்றி அமுதவாணன் கூறுகையில்,கலக்கப்போவது யாரு முடித்த உடனே அது இது எது பண்ணினேன். நல்ல பெயர் கிடைத்தது. அதில் பெஸ்டாக பண்ணுபவருக்குத்தான் ஜோடி நம்பர் ஒன்னில் சான்ஸ் கொடுத்தனர். காமெடியனாகவே இருந்திடக்கூடாது டைட்டில் அடிக்கனும் என்று நடனம் கற்று ஜோடி நம்பர் ஒன்னிலும் வின் பண்ணினேன்.
அதன்பிறகுதான் தாரைத்தப்பட்டையில் காமெடியனாக நடித்தேன்.சினிமாவைப்பொறுத்தவரை காமெடி ரோல்தான் பண்ண ஆசை. இல்லேன்னா ரேணிகுண்டா மாதிரி ஒரு கேட்டகிரியில் ஒரு படம் கிடைத்தால் இறங்கி பண்ணலாம். யதார்த்தமான விசயங்களை லைவாக சொல்ல வேண்டும். அந்த மாதிரியான கதைகளில் இயக்க வேண்டுமென்ற எதிர்கால ஆசையும் உள்ளது.
காமெடிகளை எனது ஸ்டைக்கு மாற்றித்தான் பண்ணுகிறேன். டைரக்டர்கள் கொடுப்பது நன்றாக இருந்தால் அப்படியே நடித்து விடுவேன். கொஞ்சம் டவுட்டாக இருந்தால் அவர்கள் அனுமதியுடன் திருத்தங்கள் செய்து நடிக்கிறேன். எனக்கு காமெடி ரோல் மாடல் என்றால் நாகேஷ், சந்திரபாபுதான். இவர்கள் இருவருமே நல்ல டான்சர்கள். நல்ல காமெடியன்கள். அவர்கள் பாணியில் இன்றைய காலகட்டத்துக்கேற்ப நடிக்க விரும்புகிறேன். அவர்களுக்கென ஒரு தனி ஸ்டைல் வைத்திருந்தனர். அவர்களது பாணியை இன்றைய கால கட்டத்துக்கேற்ப காமெடியை லைவாக செய்ய விரும்புகிறேன்.
இப்போது நான் லீடு ரோலில் காமெடி ஹீரோவாக நடித்துள்ள ஜூலியும் 4 பேரும் படம் மார்ச் 17ந்தேதி ரிலீசாகிறது. இப்படம் ஒரு நாய்குட்டியை மையமாகக்கொண்ட ஜாலியான காமெடி கதையில் உருவாகியிருக்கிறது. வன்முறைகள், ஆபாச வசனங்கள் மாதிரியான விசயங்கள் எதுவும் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அமர்ந்து கண்டுகளிக்கும் தரமான கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இப்படம் சினிமாவிலும் எனக்கு நல்லதொரு இடத்தை பிடித்துத்தரும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் அமுதவாணன்.