‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி, வரும் மார்ச் மாதம் நடக்க இருந்த தனது திருமணத்தை முன்கூட்டியே நிறுத்தியது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், சினிமாவில் உயர்ந்ததுபோல, இல்லற வாழ்க்கையிலும் அடியெடுத்து வைக்கிறார் என சந்தோஷப்பட்ட பலரும் அவரது இந்த முடிவால் வருத்தம் அடைந்தனர்..
ஆனாலும் விஜயலட்சுமியோ “இசையா திருமணமா என்கிற நிலை வந்தபோது இசையைவிட திருமணம் பெரிதல்ல என்கிற முடிவை எடுத்தேன்” என கூறியுள்ளார்.. சொல்லப்போனால் கடந்த சில நாட்களாக மனதளவில் நான் அடைந்த டென்ஷன் இபோதுதான் குறைந்து, ரிலாக்ஸாகி இருக்கிறேன் என்கிறார் வைக்கம் விஜயலட்சுமி.. கணவராக வர இருந்த சந்தோஷ் பண்டிட் திருமணத்துக்கு முன்பே தான் கொடுத்த வாக்குறுதிகளை மாற்றிப்பேசியதுதான் விஜயலட்சுமி இந்த முடிவெடுக்க காரணம்..
குறிப்பாக, “உனக்கு ரொம்ப நாளைக்கு சினிமாவிலும் கச்சேரியிலும் வாய்ப்பு தொடர்ந்து வரும் என்பதற்கு என்ன உத்திரவாதம்.. பேசமால் இசை பள்ளியில் அரசு கோட்டாவில் டீச்சராகிவிட்டால், காலத்துக்கும் சம்பளமும் பென்சனும் வந்துகொண்டிருக்குமே” என சந்தோஷ் பண்டிட் குறுகிய மனதுடன் பேசியதுதான் வைக்கம் விஜயலட்சுமியை மனதளவில் ரொம்பவே காயப்படுத்தி விட்டதாம்.