அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகை அமலா தமிழைக்காட்டிலும் தெலுங்கில் அத்க படங்களில் நடித்துள்ளார். திரை உலக வெற்றிக்கு பின்னர் ஏற்கனவே திருமணமான தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் மற்றும் மகன் அகிலின் வரவிற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு, அமலா சமூக சேவைகளில் ஈடுபட்டார். மும்மையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபலுக்கும் அமலாவின் மகன் அகிலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது. கோடை விடுமுறையில் இத்தாலியில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
இதற்கிடையில் ஏதோ சில காரணங்கள் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாகவும், திருமணத்திற்காக இத்தாலி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து நாகார்ஜூனா திருமண நிறுத்தம் குறித்து கூறி, டிக்கெட்டுகளை ரத்து செய்யுமாறு கூறியதாகவும் சில தினங்களாகவே செய்திகள் வெளிவருகின்றன.
வதந்தி என கூறப்பட்டாலும், இது குறித்து அக்கினேனி குடும்பத்தினர் வாய் திறக்காமல் இருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவல் வெளிவந்ததிலிருந்து நாகார்ஜூனா, நாகசைதன்யா, அகில், அமலா என அணைவரும் மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று(பிப் 27) ஐதராபாத்தில் கடை திறப்பு நிகழ்ச்சிக்கு அமலா வருக்கின்றார் என்பதறிந்த மீடியா முழுவதும் கடையின் முன் குழுமியது. வந்த வேலையை முடித்த அமலா, போட்டாவிற்கு போஸ் மட்டும் கொடுத்து விட்டு சென்றுவிட்டார். விழா முடியும் வரை மீடியாக்கள் தன்னை நெருங்கக்கூடாது என நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களிடம் அமலா கண்டிப்பாக கூறியிருந்ததாக பின்னர் தெரியவந்தது.