மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்துக்குப்பிறகு 5 வருடங்கள் நடிக்காமல் இருந்த கவுண்டமணி, 49 ஓ படம் மூலம் நாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து, வாய்மை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் நாயகனாக நடித்தார்.
அதன்பிறகு இன்னும் புதிய படங்களில் அவர் கமிட்டாகவில்லை. இந்நிலையில், சில டைரக்டர்கள் அவரைத்தேடிச்சென்று கதை சொல்லி வருகின்றனர். ஆனால் கவுண்டமணி கேட்ட புதிய கதைகளில் எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லையாம். அதோடு, தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், நான் நடித்ததில் எனக்கு அதிகம் பிடித்த படம் ஒன்னா இருக்க கத்துக்கணும். அந்த படத்தில் நடித்த வேடம் என் மனதை பாதித்தது. அதனால் அந்த மாதிரியான நல்ல வேடங்கள் இருந்தால் சொல்லுங்கள் மீண்டும் நடிக்கிறேன் என்று தனது விருப்பத்தை சொல்கிறாராம் கவுண்டமணி.