ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திலேயே தனது மார்க்கெட் எகிறும் என்று எதிர்பார்த்தார் கயல் ஆனந்தி. ஆனால் அந்த படம் வெற்றி பெற்றபோதும் அவரைத்தேடி பெரிய அளவிலான படங்கள் வரவில்லை. அதன்பிறகும் ஜி.வி.பிரகாஷே தான் நடித்த எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் ஆனந்திக்கு வாய்ப்புக்கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தி விட்டுள்ளார்.
விளைவு, தற்போது மன்னர் வகையறா, ரூபா, பண்டிகை என பல படங்களில் நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. இந்நிலையில், இதுவரை விமலுடன் நடித்த மன்னார் வகையறா படத்தில் கமிட்டாவது வரை பத்து முதல் பதினைந்து லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ஆனந்தி, தற்போது முன்னணி டைரக்டர், நடி கர்களின் படம் என்றால் 25 லட்சம், பிரபலமில்லாத டைரக்டர், நடிகர்களின் படம் என்றால் 30 லட்சம் சம்பளம் தரவேண்டும் என்று கூறி வருகிறார். இதுவரை ஆனந்தியின் சம்பளத்தை தாங்களாகவே தீர்மானித்து வந்த தயாரிப்பாளர்கள், இப்போது அவரே தனது சம்பளத்தை தீர்மானித்திருப்பதால் அதிர்ச்சியடைந் துள்ளனர்.