இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர்எஸ்.கார்த்திக் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் பீச்சாங்கை. புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த பீச்சாங்கை படத்தின் டீசர், வெளியான சில நாட்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதுகுறித்து பிஜி முத்தைய மகிழ்ச்சி பட தெரிவித்திருப்பதாவது... "தற்போது ஒட்டுமொத்த உலகினரும், ஆஸ்கர் வருது பெற்ற பல திறமையான கலைஞர்களை பாராட்டி கொண்டிருக்கிறது. இன்றைய நாட்களில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனென்றால், உலக சினிமாவால், அவர்களின் ரசனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றது.
அந்த வகையில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் எங்கள் பீச்சாங்கை படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வெளியான சில நாட்களிலேயே யுடியூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எங்கள் டீசர் கடந்திருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். எங்கள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்" என்று கூறியுள்ளார்.