ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
2016ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் திரையுலகத்தைச் சேர்ந்த பலராலும் பாராட்டப்பட்ட படம் 'துருவங்கள் 16'. அப்படத்தை யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். அவருடைய இரண்டாவது படமாக 'நரகாசுரன்' படத்தை ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, நாக சைதன்யா நாயகர்களாக நடிக்க உள்ளார்கள்.
'நரகாசுரன்' படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும், தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார். இது பற்றிய அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு கௌதம் மேனனே வெளியிட்டுள்ளார். கௌதம் மேனன் தன்னுடன் இணைந்து தயாரிப்பது குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் மகிழ்ச்சியாக உள்ளார்.
அதே சமயம் அவரிடம் ஒரு விஷயம் குறித்து கௌதம் மேனன் கருத்து தெரிவித்தாராம். “சிலர் உங்களை அதிகமாக மதிப்பிட்டிருப்பார்கள், சிலர் உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பார்கள். அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, உங்கள் வேலையைப் பாருங்கள்,” என்று சொன்னாராம்.
இயக்குனர் கௌதம் மேனனை தன்னுடைய குருவாகவே பார்க்கிறார் கார்த்திக் நரேன். இருந்தாலும் படத்தை வெளியிடுவதில் மட்டும் அவர் வழியில் நடந்து விடாதீர்கள் கார்த்திக் நரேன். அவர் இயக்கும் படத்தையே எப்போது வெளியிடுவார் என்று அவருக்கே தெரியாது, அவர் தயாரிக்கும் படங்களுக்கும் அந்த நிலைமைதான்.
'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' இயக்குனரிடம் கேட்டால் அவருடைய சோகத்தைச் சொல்வார். முடிந்தால் கேட்டுப் பாருங்கள்...