டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலக அளவில் பெருமைபடக் கூடிய திரைப்பட விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. அந்த விருதைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்கள் போகுமா, விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மட்டும் இந்தியத் திரைப்பட ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
2009ம் ஆண்டு 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பிறகு தமிழ் ரசிகர்களுக்கும் ஆஸ்கர் விருது மீதான ஆர்வம் அதிகரித்தது.
இன்று நடைபெற்ற 89வது ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான போட்டியில் இந்தியாவின் சார்பாக வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டது. ஆனால், முதல் சுற்றிலேயே இப்படம் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
89 நாடுகள் வெளிநாட்டுப் படத்திற்கான போட்டிக்குத் தங்களது படங்களை விண்ணப்பித்திருந்தன. அதில் 85 படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 9 படங்களைத் தேர்வு செய்து அதிலிருந்து இறுதிப் பட்டியலில் 5 படங்கள் விருதுக்கான போட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த Land of Mine (Denmark), A Man Called Ove (Sweden), The Salesman (Iran) (WINNER), Tanna (Australia), Toni Erdmann (Germany), ஆகிய 5 படங்களிலிருந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த 'தி சேல்ஸ்மேன்' படம் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது. இந்தப் படத்தை இயக்கிய அஸ்கர் பர்கதி விருது வழங்கும் விழாவிற்குச் செல்லவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உட்பட சில முஸ்லிம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு விசா கட்டுப்பாடுகளை விதித்ததால் அவர் ஆஸ்கர் விருது விழாவைப் புறக்கணித்தார்.
ஆஸ்கர் விருதை 'விசாரணை' படம் பெறவில்லை என்றாலும் 72வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விருதையும், மூன்று தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.