'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை கடந்த ஒரு வருட காலமாக இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள இந்தப் படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிடப் போவதாக முருகதாஸ் சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
இருந்தாலும், படத்தின் தலைப்பையே அறிவிக்காமல் ஒரு படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருப்பது இதுதான் முதல் முறை என கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்திற்கு 'சம்பவாமி' என தலைப்பை முடிவு செய்து வைத்திருந்தார்களாம். ஆனால், அந்தத் தலைப்பு படத்தின் நாயகனான மகேஷ் பாபுவுக்குப் பிடிக்கவில்லையாம்.
படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியிட இருப்பதால் மூன்று மொழிக்கும் பொதுவான தலைப்பை வையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.