தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பு சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள மான்குரோவ் காடுகளில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சிவராத்திரியை ஒட்டி படக்குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு தரிசனம் செய்ய சென்றனர். கோவிலில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விஷாலும், ஆண்ட்ரியாவும் கையில் மாலையுடன் கோவிலை சுற்றி வந்தனர். இதை பார்த்த மக்கள் இருவரும் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அவர்கள் இருவரையும் மொபைல்போனில் படம் எடுத்து அதனை இணைய தளத்தில் பரப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள சினிமா பத்திரிகையாளர்கள் சிதம்பரம் நிருபர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் நவராத்திரி வழிபாட்டுக்கு வந்துள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் மாலை அணிவிக்கப்படுவது வழக்கம் என்று விளக்கம் அளித்தனர். நடிகை ஆண்ட்ரியா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆங்கிலோ இண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.