இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சில நாட்களுக்கு முன் சிலரால் திட்டமிட்டு கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளாகி தப்பித்த நடிகை பாவனா, தைரியமாக குற்றவாளிகளை சுட்டிக்காட்டி அவர்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும் போராட்டத்திலும் இறங்கினார்.. நேர்ந்த துன்பத்தை கண்டு வெளியில் சொல்ல பயந்து வீட்டில் ஒடுங்கும் சராசரி பெண்ணாக இல்லாமல், போராட்ட குணத்தை வெளிப்படுத்திய பாவனாவின் இந்த துணிச்சலான முடிவை அனைவரும் பாராட்டினர். ஆனால் அதே சமயம் இனி என்னால் எப்படி நடிக்க முடியும்.. நடிப்பை விட்டே விலக முடிவெடுத்திருக்கிறேன் என்றும், குற்றவாளிகளை சட்டம் தண்டிக்கும் வரை நடிக்க மாட்டேன் என்று பாவனா சொன்னதாக தகவல்கள் வெளியாகின..
பாவனாவின் இந்த முடிவை கேட்ட பலரும் வருத்தப்பட்டதுடன், பாவனா தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு முன்புபோல நடிக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாவனா அடுத்து நடிக்க இருந்த 'ஆடம்' படத்தின் ஹீரோவும் பாவனாவின் நெருங்கிய நண்பருமான பிருத்விராஜ் பாவனாவுக்கு தைரியமளித்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர் மீண்டும் நடிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதுதான் உன்னை அவமதிக்க நினைத்தவர்களுக்கு தரும் பதிலடியாக இருக்கும் என அவர் பாவனாவுக்கு ஆலோசனையும் வழங்கினாராம்.