சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மலையாள திரையுலகம் மட்டுமல்லாது மொத்த கேரள மக்களும் சந்தோஷப்பட்ட நிகழ்வு ஒன்று, இப்போது எதிர்பாரதவிதமாக அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. ஆம்.. பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனக்கு அடுத்த மாதம் நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டார் என்பது தான் அந்த சோகத்துக்கு காரணம்.. தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் வைக்கம் விஜயலட்சுமி.. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்து வருகிறார்.
குரலோடு குணத்தாலும் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருக்கும் இவரை, மலையாள நாட்டின் பொக்கிஷம் என்றுதான் கேரள ரசிகர்கள் அழைக்கிறார்கள். விஜயலட்சுமியின் வாழ்வில் புதியதோர் வெளிச்சமாக திருமண சேதியும் தேடி வந்தது.. கேரளாவில் கோழிக்கோடு அருகில் உள்ள புதியங்காடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் கடந்த டிச-13ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. அதை தொடர்ந்து வரும் மார்ச் 29ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருந்த நிலையில் தான் திருமணத்தை நிறுத்தியுள்ளார் விஜயலட்சுமி..
காரணம் மணமகன் சந்தோஷ் பண்டிட், நிச்சயதார்த்தம் வரை வழக்கம்போல சாதுப்பசுவாக இருந்துவிட்டு, இப்போது திருமணம் நெருங்குவதற்கு முன் நிறைய நிபந்தனைகளை விதித்துள்ளாராம். குறிப்பாக திருமணத்திற்கு பின் விஜயலட்சுமி பாடகியாக நீடிக்க கூடாது என்றும் வேண்டுமானால் வீட்டிலேயே இசை பயிற்சி சொல்லித்தரும் ஆசிரியையாக பணி செய்யட்டும் என நிர்ப்பந்தித்தாராம் சந்தோஷ்.. மேலும் திருமணத்திற்குப்பின் விஜயலட்சுமியின் வீட்டிலேயே, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்த சந்தோஷ், இப்போது தனது வீட்டில் தான் வாழவேண்டும் என மாற்றி பேசுகிறாராம். இன்னும் சில நிபந்தனைகளும் இருக்கின்றனவாம்.
இதனால் இப்படிப்பட்ட முரண்பாடுகள் கொண்டவரை திருமணம் செய்துகொண்டு, பின்னர் காலமெல்லாம் வருந்துவதை விட, இப்போதே திருமணத்தை நிறுத்திவிட்டால் அந்த ஒரு சங்கடத்துடன் மட்டுமே போய்விடும் என முடிவு செய்த விஜயலட்சுமி, தீர்மானமாக தனது முடிவை சொல்ல வேறு வழியின்றி திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர் அவரது பெற்றோர்.