'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கதையின் நாயகி அவதாரம் எடுக்கிறார்கள். அந்த வகையில், நயன்தாரா, திரிஷா ஆகியோர் லீடு ரோல்களில் பல படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து தற்போது சோனியா அகர்வாலும் அகல்யா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். அப்படம் ஐந்து மொழிகளில் தயாராகிறது.
இவர்களைத் தொடர்ந்து அஜீத்தின் விவேகம், விஜய் 61 படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கும் இதே வேகத்தில் கதையின் நாயகியாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கியுள்ளது. அதனால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர் தற்போது கவலை வேண்டாம் படத்தை இயக்கிய டிகே இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கான கதையை நயன்தாராவை மனதில் கொண்டுதான் அவர் உருவாக்கியிருந்தாராம். ஆனால், கவலை வேண்டாம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பு காரணமாக, அந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பதிலாக இப்போது காஜல்அகர்வாலை புக் பண்ணியுள்ளாராம் டிகே. இதனால் நயன்தாரா, திரிஷா நடித்து வரும் கதையின் நாயகி பட்டியலில் தனக்கும் இடம் கிடைத்து விட்டது என்று பெருமகிழ்ச்சியில் காணப்படுகிறார் காஜல்அகர்வால்.