டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இளவட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற பிடிவாதமாக இருந்து வந்தவர்தான் தமன்னா. அதனால் சில சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு சென்றபோது தடாலடியாக மறுத்து வந்தார். ஆனால் பாகுபலிக்கு பிறகு எகிறும் என்று எதிர்பார்த்த அவரது மார்க்கெட் டல்லடிப்பதால் தற்போது படம் கிடைத் தால் போதும் என்கிற மனநிலைக்கு மாறியிருக்கிறார் தமன்னா. அதன்காரணமாக முன்னணி நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சிம்புவுடன் டிரிபிள் ஏ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர், அதையடுத்து தமிழில் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதே விக்ரம் நடித்த ஒரு படத்திற்கு முன்பு அழைப்பு விடுத்தபோது மறுத்த வர்தான் தமன்னா.
அதேபோல், தெலுங்கில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, வரலாற்று கதையில் நடிக்க வயது வித்தியாசம் பார்க்கக்கூடாது. நாம் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த வகையில், இந்த படத்தில் நான் என்டிஆரின் மனைவி ரோலில் நடிக்கிறேன். அது பெருமையில்லையா என்று கூறிய தமன்னா, நரைமுடி நடிகருடன் நடிப்பது குறித்த விமர்சனங்களில் ஆந்திராவில் எழுந்தபோது, அப்படியென்றால் சமீபத்தில் காஜல்அகர்வால்கூடத்தான் சிரஞ்சீவியுடன் நடித்தார். அதேபோல்தான் இதுவும் என்று நறுக்கென்று சொல்லி முடித்துக்கொண்டாராம் தமன்னா.