துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
வானவராயன் வல்லவராயன், நவரச திலகம், கடலை படங்களைத் தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள படம் பஞ்சுமிட்டாய். நிகிலா விமல் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, மா.கா.பா.ஆனந்தின் மனைவி, நடிகை நிகிலாவுக்கு அவ்வப்போது தனது வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து அனுப்பினாராம்.
அதுபற்றி மா.கா.பா.ஆனந்த் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து நிகிலா சென்னை வந்திருந்தார். அப்போது அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தபோது ரொம்ப அமைதியாக இருந்தார். இவர்தான் படத்தில் உங்களுக்கு மனைவியாக நடிக்கப்போகிறார் என்றனர். அதையடுத்து நிகிலாவிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு நான் விடை பெற்றபோது, சரி அண்ணா என்றார். அப்போது அவரிடம், அண்ணா என்று கூப்பிடாதே. மாகாபா என்று கூப்பிடு. இல்லையேல் ஆனந்த் என்றாவது கூப்பிடு என்றேன்.
ஆனால் அவர், அதற்கும் சரி அண்ணா என்றார். நமக்கு மனைவியாக நடிக்கப் போகிற நடிகை அண்ணா என்று அழைக்கிறாரே என்று அதிர்ச்சியுடன் பார்த் தேன். இந்த விசயத்தை வீட்டிற்கு சென்றதும் எனது மனைவியிடம் சொன் னேன். அவருக்கு சந்தோசம் தாங்கவில்லை. அடுத்து நான் படப்பிடிப்புக்கு கிளம்பும்போது, நிகிலாவுக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பினார் என் மனைவி. அப்போதுதான் அண்ணா என்று சொன்னது இப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொண்டேன் என்கிறார் மா.கா.பா.ஆனந்த்