அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன், சாரா ஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ள படம் அய்யனார் வீதி. ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யு.கே.முரளி இசையமைத்துள்ளார். பிரியன் பாடல்கள் எழுதியுள்ளார். நட்பை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை மார்ச் 17-ந்தேதி சுமார் 180 தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவினருக்கு திரையிடப்பட்ட அய்யனார் வீதி படத்திற்கு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் கூறுகையில், அய்யனார் வீதி படத்தை அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து கண்டுகளிக்கும் கதையில் இயக்கியிருக்கிறேன். ராஜபாளையத்தை கதைக்களமாகக்கொண்ட இந்த படத்தில் அய்யனார் பற்றிய 108 மந்திரங்கள் கொண்ட பாடல் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அன்பு, பாசம், உறவுகள் என அனைத்தும் இன்னும் நம் கிராமங்களில் மறையாமல் இருப்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன் என்கிறார்.